2/8/14

பணிஓய்வு மனநிறைவு!!?


தமிழ்நாடுஅரசு சமூகநலத்துறைஓட்டுநர்!!!
 &
தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகஓட்டுநர். ????
ஒரு ஒப்பீடு .
ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், வழக்கமாக
ஒரு பிரிவு
உபசார விழா நடத்துவார்கள். ஆனால், சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த அந்த
விழாவில், மாவட்ட ஆட்சியர் கையால், ஓய்வு பெறுபவர் உருவம் பதித்த தபால்தலை
வெளியிட்டு, அவரை கௌரவப்படுத்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்தார் அவர்?

 தமிழ்நாடு சமூக நலத் துறையின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில்,
ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற குழந்தைசாமிக்குத்தான் இந்த மரியாதை.
காரணம், இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்த 23 ஆண்டுகளில், ஒரு விபத்துகூட
நடந்தது இல்லையாம்.

 சமூக நலத்துறைப் பகுதி கண்காணிப்பாளர் ரமேஷ் பேசும்போது, ''குழந்தை
அண்ணனின் 23 ஆண்டு கால அனுபவத்தில், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடந்தது
இல்லை. அப்படிப்பட்ட இவருக்கு, ஓய்வு பெறும்போது நினைவில் எப்போதும் 
நிற்பதுபோல ஒரு பரிசு கொடுக்கலாம் என எங்கள் துறை ஊழியர்கள் அனைவரும்
ஆசைப்பட்டோம். அவருக்குச் சிறப்பு செய்ய, தலைவர்களுக்கு மட்டுமே வெளியிடும்
 தபால்தலையை குழந்தை அண்ணனுக்கு வெளியிட்டோம்'' என்றார்.

ஓட்டுநர் குழந்தைசாமியிடம் பேசினோம். ''1983-ம் வருஷம் லைசென்ஸ்
எடுத்துட்டு, வேடசந்தூர்ல இருக்குற சமூக நலத்துறை சத்துணவுப் பிரிவுல
பியூனா வேலை பார்த்தேன். பிறகு, டிரைவர் பிரமோஷன் கிடைச்சதும், வடமதுரையில
டிரைவரா வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஓட்டுற வண்டியை என்னோட குழந்தை மாதிரி
 கவனிச்சுக்குவேன். ஆபீஸுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து,
வண்டியைச் சுத்தம் செஞ்ச பிறகு, நான் முதல்ல செக்-அப் பண்றது பிரேக்தான்.
அடுத்து ஆயில், பேட்டரி, நாலு வீல்லயும் ஏர் செக் பண்ணிட்டு வண்டியை ஒரு
ரவுண்டு ஓட்டிப் பார்த்த பின்னாடிதான், அதிகாரிங்களை வண்டியில
உட்காரவெப்பேன். வண்டியைத் திரும்ப விடுறப்பவும் இதே மாதிரி செக்கிங்
நடக்கும். வண்டியில ஏறி உட்கார்ந்துட்டா, என்னோட முழு கவனமும்
வண்டியிலயும், ரோட்டுலயும்தான் இருக்கும். இந்த 23 வருஷ டிரைவர்
வாழ்க்கைக்குப் பிறகு, ரிட்டையர் ஆகிற அன்னிக்கு ஆபீஸுக்கு வர ரொம்ப கஷ்டமா
 இருந்துச்சு. ஆனா, என்கூட வேலை பார்த்தவங்க, அந்தக் கஷ்டமெல்லாம் மறக்கிற
மாதிரி ஸ்டாம்பு போட்டது மனசுக்கு நிறைவா இருக்கு!' என்று நெகிழ்ந்தார்
குழந்தைசாமி.

{@ உ.சிவராமன், படங்கள்: வீ.சிவக்குமார்}மோட்டார் விகடன் 01 Aug, 2014]
------------------------------------------
---------------------------------------------




இவருடைய திறமையை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் சிலவற்றை
இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில்
சென்னை நகர நெறுக்கடியான போக்குவரத்தில் எனக்கு தெரிந்து 25 வருடத்திற்கும்
 மேலாக எந்த விபத்தும் இல்லாமல் பணிக்கும் தவராமல் வரும் வந்த ஓட்டுனர்கள்
நிறைய பேர் இருந்தனர் இருக்கின்றனர். அதிலும் இவர்கள் ஓட்டுவது கனரக
வாகனம். அதிலும் ஷிப்டுக்கு ஒருவர் என பல கை மாறும் வாகனங்கள். என்ன
குழந்தைசாமிக்கு அமைந்தது போல மரியாதை படுத்த நினைக்கும் அலுவலகம்
இவர்களுக்கு இல்லை. விபத்தில்லாமல் ஓட்டினாயா இந்த பிடி 500ரூ பரிசு தொகை(
இது கூட நிர்வாகம் தருவதில்லை என கேள்வி) என்பதோடு அவர்கள் கடமை முடிந்தது.
 வெய்யல் மழை என எதையும் பாராமல் மக்களுக்காக பெறுத்த போக்குவரத்து
நெறிசலில் தினம் 8 மணிநேரம் பணி செய்து விபத்தில்லாமல் ஓட்டும் இவர்களுக்கு
 சரியான அங்கீகாரம் இருப்பதில்லை.

  @ sivaraj
thanks: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97204
===================================================================
மேலும் படிக்க :
பென்ஷன் பெறாமலேயே இறந்து போகும் போக்குவரத்து தொழிலாளர்கள்:...
[http://www.ttsftnstc.blogspot.in/2013/06/blog-post_25.html]

ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஆர்ப்பாட்டம்
[http://www.ttsftnstc.blogspot.in/2014/01/blog-post_1515.html]

கோவையில்,ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்புகுடும்...
[http://www.ttsftnstc.blogspot.in/2013/10/blog-post_24.html]
[http://www.ttsftnstc.blogspot.in/2013/10/blog-post_21.html]

===========================================================

2 கருத்துகள்:

சந்திரன்.ப சொன்னது…

"தலைவர்களுக்கு மட்டுமே வெளியிடும்
தபால்தலையை
குழந்தை அண்ணனுக்கு வெளியிட்டோம்''

இதற்கு ஏதும் வழிமுறை இருந்தால் கூறுங்கள்.

RJ. சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள சிறப்புத் தபால் தலைச் சேகரிப்பு மையங்களில் ஒரு விண்ணப்பம் வாங்கி, அதைத் தெளிவாகப் பூர்த்திசெய்ய வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், உங்கள் புகைப்படத்தை இணைத்து விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் விண்ணப்பத்தைச் செலுத்திய நாளில் இருந்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் உங்கள் புகைப்படத்தில் அச்சடிக்கப்பட்ட 12 தபால் தலைகள் உங்கள் வீடு தேடிவரும். இதை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்!

@ RJ.