5/1/15

மேலும் மூவர்


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் மேலும் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து தொழிலாளர்களுடன் பேச
11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்நிலையில், 
சாலை போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர், திருநெல்வேலி போக்குவரத்து கழக நிதி ஆலோசகர் மற்றும் போக்குவரத்து துறை தனி அலுவலர்.ஆகியோர் இந்த குழுவில் 
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: