28/12/14

தொடங்கியது வேலைநிறுத்தம்.


தொடங்கியது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல்லவன் இல்லம்,அண்ணாநகர்,திருவான்மியூர் பணிமனைகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிமனைகளில் பேருந்துகளை இயக்காமல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதுபோல ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம், விருதுநகர் போக்குவரத்து பணிமனையிலும் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வராததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதாக அறிவித்த போக்குவரத்து ஊழியர்கள் இன்றே போராட்டத்தை தொடங்கினர்
- See more at: http://www.ns7.tv/ta/

கருத்துகள் இல்லை: